அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது, அதிமுக பழைய வலிமையை பெறவேண்டும், வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும், எம்ஜிஆர், ஜெயலலிதா பாதையில் மக்களுக்கு உதவி செய்யும் ஒரு ஆட்சி அமைய வேண்டும். இந்த நல்ல எண்ணம் நிறைவேற அதிமுக ஒன்றுபட வேண்டும். கட்சியில் இருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
ஆனால், அதற்கு பொதுச் செயலாளர் அவரை கட்சிப் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களது கட்சி பதவியில் இருந்து விலகுகின்றோம். கட்சி ஒன்று பட்டால் பதவியில் நீடிப்போம் என்று அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.