நெல்லை, நாகர்கோவிலுக்கு ரயில் சேவை
இதேபோல சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வாராந்திர சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது ஜூன் மாதம் 7ஆம் தேதி, 14 ஆம் தேதி, 21 ஆம் தேதி மற்றும் 28ஆம் தேதி ஆகிய தினங்களில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 3 மணியளவில் புறப்பட்டு திருநெல்வேலிக்கு அடுத்த நாள் காலை 7 10 மணியளவில் சென்று சேர்கிறது. இந்த சிறப்பு ரயில்கள் திருநெல்வேலி,கோவில்பட்டி, விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அதிராம்பட்டினம், திருவாரூர், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு வந்தடைகிறது.