யார் இந்த சைதை துரைசாமி.?
சைதை துரைசாமி எம்ஜிஆரின் தீவிர ஆதரவாளர், திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து வந்த சமயத்தில், பொதுக்கூட்டம் ஒன்றில் கருணாநிதி பங்கேற்று எம்ஜிஆருக்கு எதிரான கருத்தை தெரிவித்து வந்தார். அப்போது, ஆவேசமாக மேடைக்கு ஏறிய சைதை துரைசாமி, கருணாநிதிக்கு... எலுமிச்சைப் பழங்களைக் கொண்ட மாலை ஒன்றைப் போட்டவாறே, ''இதைத் தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்; அ.தி.மு.க-வுக்கு எதிரான பித்தம் உங்களுக்குத் தணியட்டும்'' என தெரிவித்தார்.