
விவசாயம் ஒரு நாட்டின் பொருளாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் சமூக நலனுக்கு முக்கியமானது. விவசாயம் மக்களுக்கு அடிப்படை உணவு தேவைகளை பூர்த்தி செய்கிறது. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் பொருட்கள் போன்றவை விவசாயத்தால் மட்டுமே சாத்தியமாகின்றன. இந்தியா போன்ற நாடுகளில், விவசாயம் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.
இது ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியையும் ஈட்டுகிறது. விவசாயம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, நகர்ப்புற இடம்பெயர்வைக் குறைக்கிறது. விவசாயம் தமிழகத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. இது மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது.
அதே நேரம் சிறு, குறு விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அதில் நீர்பாசன வசதி ஏற்படுத்த மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டமும் ஒன்றாகும். சிறு, குறு விவசாயிகளுக்கான நீர்பாசன வசதி ஏற்படுத்த மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுகின்றன. சிறு, குறு விவசாயிகளுக்கு பம்பு செட், மோட்டார், பைப்லைன், ஆழ்துளை கிணறு, சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன கருவிகள் வாங்குவதற்கு நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணறு அமைக்க 50% மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட் அமைக்க 70% மானியம் மற்றும் 30% விவசாயிகள் பங்களிப்பு உள்ளது.
இதே போல மற்றொரு முக்கிய திட்டம் தான் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான நீர்பாசன வசதி ஏற்படுத்துவதற்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டம், குறிப்பாக 50% மானியத்துடன் அதிகபட்சம் ரூ.1,00,000 வரை கடன் வழங்கும் திட்டம், தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய திட்டங்களில் ஒன்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) மூலம் வழங்கப்படுகிறது.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகளை மேம்படுத்துவதற்காக குறிப்பாக ஆழ்துளைக் கிணறு, மோட்டார், பைப்லைன், சொட்டு நீர்ப்பாசனம் பொன்ற திட்டத்திற்கு மானியத்தோடு கடன் உதவி வழங்கப்படுகிறது. விவசாய உற்பத்தித்திறனை அதிகரித்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு இந்த திட்டம் பெரிதும் பயன் கொடுத்து வருகிறது.
மானிய கடன் உதவி பெற தகுதி:
பயனாளிகள்: பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.
2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்கு குறைவாக உள்ளவர்கள் சிறு விவசாயிகளாகவும், 1.25 ஏக்கர் நஞ்சை அல்லது 2.5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்கு குறைவாக உள்ளவர்கள் குறு விவசாயிகளாகவும் கருதப்படுவர். எனவே மானிய கடன் பெற விண்ணப்பதாரர் சிறு மற்றும் குறு விவசாயி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், இது வட்டாட்சியர் மூலம் வழங்கப்படுகிறது. இந்த ஆவணங்களை பெற்றிருக்க வேண்டும்.
கடன் மற்றும் மானிய விவரங்கள்:
கடன் தொகை: அதிகபட்சம் ரூ.1,00,000 வரை வழங்கப்படும் இந்த கடன் தொகையில் 50% அதாவது அதிகபட்சம் 50,000 ரூபாய் வரை அரசு மானியமாக வழங்கப்படும். குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது
கடன் திருப்பிச் செலுத்தும் காலம்: பொதுவாக 5 ஆண்டுகள் வரை.
பயன்படுத்தப்படும் துறைகள்:
புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்தல். மின்மோட்டார், பம்பு செட், பைப்லைன், சொட்டு நீர்ப்பாசன அமைப்பு போன்றவை. சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட் அமைத்தல்.
வருமானச் சான்று: குடும்ப வருமானத்தை உறுதிப்படுத்தும் ஆவணம்.
சாதிச் சான்று: BC/MBC/DNC வகுப்பினருக்கு தேவை
வங்கிக் கணக்கு விவரங்கள்: கடன் மற்றும் மானியம் செலுத்தப்படுவதற்கு.
புகைப்படங்கள்: 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
நில ஆவணங்கள்: பட்டா, சிட்டா, அடங்கல், புல வரைபடம்
அடையாளச் சான்று: ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை.
திட்ட மதிப்பீடு: ஆழ்துளைக் கிணறு அல்லது பிற நீர்பாசன உபகரணங்களுக்கான செலவு மதிப்பீடு.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மாவட்ட அலுவலகம்.
வேளாண்மை பொறியியல் துறை அல்லது தோட்டக்கலை துறை மாவட்ட அலுவலகங்கள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேளாண் துறை பிரிவு.
விண்ணப்பப் படிவம்:
TABCEDCO இணையதளம் (www.tabcedco.com) (www.tabcedco.com) அல்லது மாவட்ட அலுவலகத்தில் இருந்து படிவத்தைப் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆவணங்களை இணைத்து மானியத்தோடு கடன் பெற சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கி கணக்கில் பணம்
விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு, தகுதி உறுதி செய்யப்பட்ட பிறகு, வங்கி மூலம் கடன் ஒப்புதல் அளிக்கப்படும். இதனையடுத்து மானியத் தொகை விவசாயியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.