இந்நிலையில் தாத்தா செல்லத்துரையை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கவின் கடந்த 27ம் தேதி அழைத்து வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸ் தம்பதியின் மகன் சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தார். இதனையடுத்து சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக போலீஸ் தம்பதியான சரவணன்- கிருஷ்ணகுமார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் சிறப்பு காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.