ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விவரங்களை தவெக நிர்வாகிகள் சேகரித்து வருவதாகவும், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிரமப்படாமல் இருக்க ஒரே கட்டமாக மிகப்பெரிய அளவில் விழாவை நடத்துவது பற்றியும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த ஆண்டும் அரசு பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு தனி கவுரவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.