தமிழகத்தில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்ய ஜூலை 12ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறும். மகளிர் உரிமைத் தொகை பெற ரேஷன் கார்டு முக்கியம் என்பதால், இந்த முகாமில் திருத்தங்கள் செய்ய வாய்ப்பாக அமையும்.
தமிழக முழுவதும் சுமார் 2 கோடியே 24 லட்சம் ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இந்த கார்டுகள் மூலம் ஏழை, எளிய மக்கள் இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப்பொருட்களை வாங்கி வருகிறார்கள். குறிப்பாக அரசி, பச்சரிசி, கோதுமை, பாமாயில், சக்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 6 கோடிக்கு மேலான மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ரேஷன் அட்டை உணவு பொருட்கள் வாங்குவதற்கு முக்கிய தேவையாக இருந்தாலும் அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் ஆதாரமாக உள்ளது. அந்த வகையில் மழை வெள்ள புயல் பாதிப்பின் போது மக்களுக்கு நிவாரண உதவி வழங்கவும், பொங்கல் மற்றும் தீபாவளி பரிசு தொகுப்பு வழங்குவதற்கும் முக்கிய அடையாள அட்டையாக உள்ளது.
24
அடையாள அட்டையாக ரேஷன் கார்டுகள்
இது மட்டுமில்லாமல் தமிழகத்தில் மகளிர் உரிமை தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு ரேஷன் அட்டை முக்கிய சான்றாக உள்ளது. ரேஷன் அட்டை இல்லாத பல லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல லட்சம் பேர் ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்ததால் திணறிய அரசு சில மாதங்கள் புதிய ரேஈன் அட்டைகளை வழங்குவதை நிறுத்தி வைத்தது. இதனை தொடர்ந்து வீடு வீடாக சென்று சோதனை செய்து ரேஷன் அட்டை வழங்கும் பணியானது தொடங்கியது. இருந்த போதும் தற்போதும் 2 லட்சம் பேர் புதிதாக ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
34
மகளிர் உரிமை தொகை - ரேஷன் கார்டு
இந்த சூழ்நிலையில் மகளிர் உரிமை தொகை பெற குடும்ப அட்டை பெற முக்கிய தேவையாக இருப்பதால் குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் செய்ய பல நாட்கள் உணவு பொருட்கள் வழங்கல் துறை அலுவலகத்திற்கு தினந்தோறும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாதமும் ரேஷன்கார்டில் திருத்தம் செய்ய முகாமை நடத்தி வருகிறது.
அந்த வகையில் நாளைய தினம் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி ஜூலை 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 12.07.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச்சான்று உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.