அடுத்தடுத்து 2 நாள் தொடர் விடுமுறை.! சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து துறை குஷியான அறிவிப்பு

Published : Apr 03, 2025, 07:54 AM IST

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வார இறுதி நாட்களில் குளுமையான இடங்களுக்கு சுற்றுலா செல்ல பொதுமக்கள் திட்டமிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

PREV
14
அடுத்தடுத்து 2 நாள் தொடர் விடுமுறை.! சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து துறை குஷியான அறிவிப்பு

Weekend Holiday Special bus : தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக எப்போ விடுமுறை கிடைக்கும் குளுமையான மலைப்பகுதிக்கு செல்லலாம் என திட்டமிடுவார்கள். அந்த வகையில் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

இதனையொட்டி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நாளை (04/04/2025) வெள்ளிக்கிழமை( 05/04/2025) சனிக்கிழமை (06/04/2025) மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்களையொட்டி  சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது
 

24

வார விடுமுறை சிறப்பு பேருந்து

சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 04/04/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 245 பேருந்துகளும், 05/04/2025 (சனிக்கிழமை) 240 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

34

எங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை. வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 04/04/2025 வெள்ளிக் கிழமை அன்று 51 பேருந்துகளும் 05/04/2025 சனிக்கிழமை அன்று 51 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாதாவரத்திலிருந்து 04/04/2025 அன்று 20 பேருந்துகளும் 05/04/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும் ஞாயிறு அன்று விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.  
 

44
koyambedu

முன்பதிவு செய்து பயணியுங்கள்

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 5,563 பயணிகளும் சனிக்கிழமை 3,447 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 5,518 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories