நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
தமிழகத்தில் விடுமுறை என்ற வார்த்தையை கேட்டாலே பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் குஷிதான். அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டாலே சொல்ல வேண்டாம். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்துள்ள நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 7-ம் தேதி திங்கட்கிழமை மாலை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.