மருத்துவமனையில் அடுத்தடுத்து அனுமதி
சென்னை திருவல்லிக்கேணி அண்ணா சாலை பகுதியில் பிலால் பிரியாணி என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது, இங்கு சிக்கன் மற்றும் பீஃப் உள்ளிட்டவைகளில் தயாரிக்கப்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 30ஆம் தேதி இந்தக் கடையில் உணவருத்திய பலர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அன்சாரி(37), ஃபயாஸ் கான் (23 ),முகமது தசிர்( 21 )கல்லூரி மாணவர, மற்றும் செய்யது அலி மற்றும் அவர்கள் நண்பர்கள் 5 நபர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.