இதன் படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வருகிற (28/03/2025) வெள்ளிக் கிழமை அன்று 460 பேருந்துகளும், சனிக் கிழமை (29/03/2025 )அன்று 530 பேருந்துகளும் ஆக மொத்தம் 990 பேருந்துகளும் இயக்கப்பட இருப்பதாக கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 28/03/2025 வெள்ளிக் கிழமை அன்று 100 பேருந்துகளும் மற்றும் 29/03/2025 சனிக்கிழமை அன்று 95 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.