பொங்கல் பண்டிகைக்காகச் சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக, வரும் ஜனவரி 18-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நெல்லையிலிருந்து தாம்பரம் நோக்கி ஒருவழி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06178) இயக்கப்படுகிறது.
• புறப்படும் நேரம்: ஜனவரி 18, மதியம் 1:00 மணி (நெல்லை)
• சென்றடையும் நேரம்: ஜனவரி 19, அதிகாலை 3:00 மணி (தாம்பரம்)
• வழித்தடம்: மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாகத் தாம்பரம் சென்றடையும்.