இந்நிலையில் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நிலையில், மகளிர் உரிமை தொகை ரூ. 2500 எப்போது வழங்கப்படும் என எதிர்பார்ப்பில் தமிழக மகளிர்கள் காத்து கிடந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது ரூ.1000 மட்டும் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஜூலை மாதத்திற்கான மகளிர் தொகை ரூ.1000 நேற்று வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் எப்போது ரூ.2500 கிடைக்கும் என எதிர்பார்த்து காத்து கிடந்தனர். வரும் ஜூன் 22ம் தேதி தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.