அரசு பணியில் சேர வேண்டும் என்பது பலரது லட்சியம் கனவாக இருந்து வருகிறது. இதற்கான பல லட்சம் இளைஞர்கள் மத்திய, மாநில அரசு தேர்வுக்கு இரவு, பகல் பாராமல் படித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தனியார் கோச்சிங் சென்டரில் லட்சக்கணக்கில் பணம் கட்டி படித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ள 225 ஆர்வலர்களுக்கு நாளை முதல் மூன்று மாதங்களுக்கு முதன்மைத் தேர்வுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.