Savukku Shankar: சார்பதிவாளர்கள் தப்பியது எப்படி? லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை விபரத்தை கசியவிட்டது யார்? சவுக்கு சங்கர் பகீர்!

Published : Jun 16, 2026, 06:22 PM IST

DVAC Raid: பத்திரப் பதிவுத் துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை குறித்த தகவல் முன்கூட்டியே கசிந்ததால், சில சார்பதிவாளர்கள் தப்பித்ததாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து முதல்வர் உளவுத்துறை மூலம் விசாரிக்க வேண்டும்.

PREV
14
சவுக்கு சங்கர் சொன்ன பகீர்

பத்திரப் பதிவுத் துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடந்து கொண்டிருந்தபோது, சத்தம் இல்லாமல் ஒரு சில குறிப்பிட்ட சார்பதிவாளர்கள் மட்டும் இச்சோதனைகள் குறித்து முன்னதாக தகவல் தெரிந்து தப்பித்துள்ளதாகவும் உளவுத்துறை மூலமாக முதல்வர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சவுக்கு சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

24
பல கோடிகளுக்கு அதிபதி

இதுதொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பத்திரப் பதிவுத் துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடந்து கொண்டிருந்தபோது, சத்தம் இல்லாமல் ஒரு சில குறிப்பிட்ட சார்பதிவாளர்கள் மட்டும் இச்சோதனைகள் குறித்து முன்னதாக தகவல் தெரிந்து தப்பித்தனர். திமுக ஆட்சி காலத்திலும், அதற்கு முன்பும் பல ஆண்டுகளாக பத்திரப் பதிவுத்துறையில் கோலோச்சியவர் பாலசுப்ரமணியம். தமிழகத்தில் பல மாவட்டங்களில், மாவட்டப்பதிவாளராக பணியாற்றிய இவர், மூர்த்திக்கு வசூல் செய்து தருவதை முழுநேர வேலையாக செய்து கொண்டிருந்தார். பல கோடிகளுக்கு அதிபதி.

34
ஒரு சார் பதிவாளர் நியமனத்துக்கு 50 லட்ச ரூபாய்

ஒரு சார் பதிவாளர் நியமனத்துக்கு 50 லட்ச ரூபாய் வரை வாங்கி அமைச்சருக்கு கொடுத்து விட்டு, அந்த சார் பதிவாளரை தான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். இவர் சொல்லும் சொத்துப் பத்திரங்களையெல்லாம் அந்த சார் பதிவாளர் செய்து தர வேண்டும். இதற்கு தனியாக பாலசுப்ரமணியம் வசூல் செய்து கொள்வார். பாலசுப்ரமணியம், சென்னை புறநகரில் சட்டசிக்கலில் உள்ள சொத்து விபரங்களை அருணிடம் கொடுப்பார். அருண் கொரட்டூர் விநாயகம் என்ற ரவுடியை வைத்து அந்த இடத்தை possession எடுத்து, GTM @ கவுதம் மூலமாக பத்திரப் பதிவு செய்வார். இதன் மூலம் கிடைக்கும் பணம், ஹவாலா மூலமாக வெளிநாட்டுக்கு அனுப்பப்படும்.

44
பதிவாளர்களை அலர்ட் செய்து காப்பாற்றியவர்

இதைத்தான் அருண் மே 2023 முதல் ஏப்ரல் 2026 வரை செய்து வந்தார். புதிய ஆட்சி வந்ததும், பத்திரபதிவுத்துறை ஐஜி அருண் சுந்தர் தயாளன் செய்த முதல் வேலை, இந்த பாலசுப்பிரமணியத்தை பணி இடைநீக்கம் செய்ததே. இந்த பாலசுப்ரமணியத்திடம்தான், “அதிரடி சோதனைகள்” பற்றிய தகவலை சொல்லி, பாலசுப்ரமணியம் அவருக்கு வேண்டிய சார் பதிவாளர்களை அலர்ட் செய்து காப்பாற்றினார். உளவுத்துறை மூலமாக முதல்வர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அருண் ஐபிஎஸ் மற்றும் பாலசுப்ரமணியம் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories