மேலும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் தான் உள்ளே புகுந்து பிரச்சனையை ஏற்படுத்தியதாக பரவும் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, ஆங்கில தொலைக்காட்சி முதல் தமிழ் தொலைக்காட்சிகள் வரை எல்லாம் லைவில் நேரடி ஒளிபரப்பில் இருந்தது. அப்படி ஒரு சம்பவம் நடைபெற்று இருந்தால் உங்கள் கண்ணில் படாமல் இருந்திருக்குமா.?
20ஆயிரம் பேர் கூடி உள்ள கூட்டத்தில் ஒரு சிலர் உள்ளே சென்று ஆசாதாரண சூழ்நிலை உருவாக்க முடியுமா.? விஷமத்தனமான பிரச்சனையில் ஈடுபட முடியுமா என கேள்வி எழுப்பினார். பத்திரிக்கையாளர் கூட்டத்தில் 30 பேர் இருக்கிறார்கள். அந்த இடத்தில் 2 அல்லது 3 பேர் விஷமத்தனமாக செயல்பட்டால் ஏற்றுக்கொள்வீர்களா என கேள்வி எழுப்பினார்.