தமிழக வெற்றிக் கழகம் தலைவர், நடிகர் விஜயின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட பலர் அடங்குவர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் சதியா.? விபத்தா.? பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.
அதிலும் கரூர் மாவட்டத்தின் திமுகவின் முக்கிய நிர்வாகியான செந்தில் பாலாஜி மீது தவெகவினர் விமர்சித்து வருகிறார்கள். இதற்கு இன்று வீடியோ ஆதாரத்துடன் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.