தமிழக வெற்றிக் கழகம் தலைவர், நடிகர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் கரூர் வேலுசாமிபுரத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். 16 பெண்கள், 10 குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழக்க, பலர் காயமடைந்தனர். விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியதால், போதிய பாதுகாப்பு இன்றி நெரிசல் ஏற்பட்டதாகவும், விஜய் வேண்டுமென்றே பல மணி நேரம் தாமதமாக வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கரூர் மாவட்ட செயலாளர் முதல் குற்றவாளியாகவும், கட்சியின் பொதுச் செயலாளர் என். புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார் மீதும் கரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.