இந்த நிலையில் தனது மனதில் உள்ளதை மக்களிடம் தெரிவிக்க இருப்பதாக கூறி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் செங்கோட்டையன், அப்போது அவர் கூறுகையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களையும், ஒதுங்கி இருந்தவர்களையும் நேரடியாக வீட்டிற்கு தேடி சென்று அழைத்து வந்தவர் எம்ஜிஆர், அவரது மறைவையடுத்து தலைவருக்கு பிறகு கட்சியை நடத்த ஆளுமை மிக்க தலைமை, மக்களிடம் செல்வாக்கு மிக்க தலைவர் நீங்கள் தான் வர வேண்டும் என ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்து அழைத்து வந்தோம்.