எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்த செங்கோட்டையனின் அரசியல் அனுபவம், களப்பணி தவெகவுக்கு உறுதுணையாக இருக்கும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
தவெகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த செங்கோட்டையன், ''தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகள் மட்டுமே தேவை என்ற நிலை இருக்கக் கூடாது.
விஜய்க்கு மக்கள் ஆதரவு
3வதாக ஒரு கட்சி வேண்டும். பள்ளி குழந்தைகள் கூட விஜய்க்கு வாக்களியுங்கள் என்ற நிலை உள்ளது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நேர்மையான, தூய்மையான ஆட்சியை நடத்த ஒருவர் தேவை என மக்கள் நினைக்கின்றனர்.
தவெகவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. அதனால் தான் தவெகவில் இணைந்தேன். விஜய் மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டார்'' என்று தெரிவித்துள்ளார்.