செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தவுடன் அவருக்கு மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் (Chief Coordinator)என்ற உயரிய பொறுப்பை கொடுத்துள்ளார் விஜய். மேலும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கோட்டையன் இணைவதற்கு முன்பே பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இணையான அதிகாரம் வழங்கப்படும் என்று அவரிடம் உறுதி அளித்திருந்த விஜய் கட்சியின் இணைந்தபின் சொன்னதை செய்துள்ளார்.
புஸ்ஸி ஆனந்துடன் கலந்தாலோசிக்க வேண்டும்
ஆனால் இது தொடர்பாக வெளிட்ட அறிக்கையில் தான் விஜய் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார். அதாவது மேற்கொண்ட பொறுப்புகளில் நியமிக்கப்படும் செங்கோட்டையன் என்னுடனும், கழக பொதுச்செயலாளருடனும் (புஸ்ஸி ஆனந்த்) ஆலோசித்து கழக பணிகளை மேற்கொள்வார் என்று விஜய் கூறியுள்ளார். அரசியலில் மூத்த தலைவரான செங்கோட்டையன் தவெகவில் விஜய்க்கு அடுத்து முக்கிய முடிவெடுப்பார் என்று தகவல்கள் பரவின.