கதாநாயகன் பில்டப் தானே கொடுப்பார். கரூரில் 41 பேர் உயிரிழந்த பிறகு பண்ணையார் விஜய் பண்ணை வீட்டுக்கு கூப்பிட்டு அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார். இது என்னடா கான்செப்ட். இவங்க செய்யுறதை பார்த்து அரசியலில் இருப்பவர்களே சென்று விடுவார்கள். தவெக எல்லாம் இருக்குமுன்னு நினைக்கிறீங்களா. எனக்கென்னமோ சந்தேகம் தான்.
காமெடியாக மாறிய கமல்ஹாசன்
விஜய் படம் நடித்தபோது நிறைய பேர் தெருவுக்கு வந்துள்ளனர். அவர் முகத்தைப் பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தினர் கைதட்டிவிட்டு சென்றுவிடுவார்கள். இப்படிதான் கமல்ஹாசன் வாரிசு அரசியலையும், ஊழலையும் எதிர்ப்பேன் என்றார்.
டார்ச் லைட்டில் டிவியை உடைத்தார். அவர் அரசியலிலும் உலக நாயகனாக மாறப்போகிறார் என்று கூறினார்கள். இப்போது காமெடியாக மாறி விட்ட கமல்ஹாசன் அங்கு (திமுக) போய் சேர்ந்து விட்டு 15 சீட் கேட்கிறார்.