"கூட்டணிக்காகக் காத்திருக்காமல், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். களத்தை மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஒரு நல்ல அரசியல் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தோடு நாங்கள் தொடர்ந்து செயல்பட உள்ளோம்," என்று சீமான் தெரிவித்தார்.
"வாக்குக்குப் பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு மத்தியில், எந்த எதிர்பார்ப்பும் இன்றி, பணம் வாங்காமல் 35 லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளனர். இந்த எண்ணிக்கை விரைவில் 60 லட்சமாக உயர்ந்து, ஒரு கோடி வாக்குகளை எட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது," என்றும் அவர் கூறினார்.
மாற்றம் என்பது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஏற்படும் என்றும், அவசரம் காட்டக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். "நான் தற்போது மக்களுக்கு கசாயம் கொடுத்து வருகிறேன். அது மெதுவாகத்தான் வேலை செய்யும்," என்று அவர் உதாரணம் மூலம் விளக்கினார்.