கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதித வெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனைத் தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்வுகள், பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பரிந்துரைக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், பொதுக்கூட்டம், ரோடு ஷோக்கள் நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சில நாட்களுக்கு முன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று மூத்த அமைச்சர்கள் முன்னிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கலந்து கொண்டன. அனைத்து கட்சிகளின் ஆலோசனைக்கு பின்னர் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.