தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21ம் தேதியை தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், அக்டோபர் 25ம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்கு முந்தைய நாட்களான அக்டோபர் 18 மற்றும் 19 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இந்நிலையில் பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 21ம் தேதி செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
25
தீபாவளி மறுநாள் விடுமுறை
இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தீபாவளி மறுநாள் அதாவது அக்டோபர் 21ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்: இந்த ஆண்டு 20ம் தேதியன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள்.
35
தமிழக அரசு
அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 21 செவ்வாய்கிழமை ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும். அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் அக்டோபர் 25 சனிக்கிழமை பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அனைத்து அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மாநகராட்சி பள்ளிகள் அக்டோபர் 25ம் தேதி சனிக்கிழமை முழு நேரம் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்திருந்தது. இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் நாளை பள்ளிகள் முழுநேரம் செயல்படும் மற்றும் செவ்வாய்கிழமை அட்டவணைப்படி இயங்கும்.
55
புதுச்சேரி பள்ளிகள் இயங்கும்
அதேபோல் புதுச்சேரியில் உள்ள அரசு, நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் நாளை 25ம் தேதி அனைத்து பள்ளிகளும் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வழக்கம் போல் வெள்ளிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.