Published : Feb 14, 2025, 07:44 AM ISTUpdated : Feb 14, 2025, 07:49 AM IST
தமிழகத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் தொடர் விடுமுறை கிடைத்த நிலையில் பிப்ரவரி மாதம் விடுமுறை கிடைக்காத மாதம். இந்நிலையில் மார்ச் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்பதை பார்ப்போம்.
குஷியோ குஷி! மார்ச் மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை!
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே அளவில்லாத சந்தோஷம் தான். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பொருந்தும். அதிலும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். அந்த வகையில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் மாணவர்களுக்கு கொண்டாட்ட மாதமாகவே அமைந்தது. அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் ஒரு பக்கம் வடகிழக்கு பருவமழையால் விடுமுறை கிடைத்தால் மறு பக்கம் அரையாண்டு தேர்வு முடிந்து 10 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது.
25
பள்ளி மாணவர்கள்
இதனையடுத்து ஜனவரி 2ம் தேதி பள்ளி தொடங்கி ஒரு வாரம் தான் வகுப்புகள் நடைபெற்ற நிலையில் எந்த வருடமும் இல்லாத வகையில் பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். குறிப்பாக ஜனவரி 11ம் தேதி தொடங்கி ஜனவரி 19ம் தேதி வரை விடுமுறை கிடைத்தது. மொத்தமாக பார்க்க போனால் ஜனவரி மாதத்தில் பள்ளிகள் வெறும் 10 நாட்கள் மட்டுமே நடந்திருக்கும்.
35
பிப்ரவரி மாதம்
அதேபோல் பிப்ரவரி மாதம் வந்துவிட்டால் விடுமுறையே கிடைக்காத மாதம் என கூறப்படும். அந்த வகையில் பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசம் விடுமுறை மட்டுமே வருகிறது. மற்றபடி வார விடுமுறை நாட்கள் வரும்.
இந்நிலையில் மார்ச் மாதத்தில் எத்தனை நாட்கள் அரசு விடுமுறை, எந்தெந்த நாட்கள் வருகிறது என்பது குறித்து பள்ளி மாணவர்கள் இப்போதே காலாண்டரை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அதன்படி மார்ச் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு வருட பிறப்பும், மார்ச் 31ம் தேதி திங்கள் கிழமை ரம்ஜான் பண்டிகையும் வருகிறது. மார்ச் மாதத்தில் மட்டும் 2 நாட்கள் மட்டுமே அரசு விடுமுறை வருகிறது. அதில் ஒரு அரசு விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வருவதால் பள்ளி மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
மற்றப்படி வார விடுமுறைகள் 10 நாட்கள் வருகிறது. அரசு மற்றும் வார விடுமுறை நாட்கள் சேர்த்து மார்ச் மாதத்தில் மட்டும் 11 நாட்கள் விடுமுறை வருவதால் பள்ளி மாணவர்கள் இப்போதே குஷியில் இருந்து வருகின்றனர்.