School Student: கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதனிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் மே 4ம் தேதி வெளியாக உள்ளது. ஆகையால் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு முழு ஆண்டு தேர்வு அட்டவணையில் அதிரடி மாற்றம் செய்தது.
25
முழு ஆண்டு தேர்வு
அதாவது அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் 16ம் தேதி நடைபெறுகிறது. இதில் 1ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 2ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 3ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12 மணி வரையிலும், 4ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 5ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது.
35
முழு ஆண்டு தேர்வு அட்டவணை
அதேபோல் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 தேதி 16 வரை தேர்வு நடைபெறுகிறது. இதில் 6ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 7ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 8ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், 9ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 1ம் தேதி வெள்ளிக்கிழமை திறக்கப்படுமா அல்லது தேதி மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களின் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ம் தேதி திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
55
பள்ளி திறப்பு தள்ளிபோக வாய்ப்பு
எனினும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.