இந்த நாணயம் ரூ.1,000 மதிப்பை கொண்டது. இதன் மூலம் ராஜேந்திர சோழனின் பெருமையையும், சோழப் பேரரசின் செல்வச் செழிப்பையும் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாணயத்தின் முன்புறத்தில், இந்தியாவின் இறையாண்மையை அடையாளப்படுத்தும் வகையில், "வாய்மையே வெல்லும்" என பொருள்படும் வகையிலான 'சத்யமேவ ஜெயதே' என தமிழில் பொறிக்கப்பட்டு உள்ளது.
அதன் மேல், இந்திய தேசியச் சின்னமான அசோக சின்னம் உள்ளது.
இடதுபுறத்தில், தேவநாகரி மொழியில் 'பாரத்' என்றும், வலதுபுறத்தில், ஆங்கிலத்தில் 'இந்தியா' என்றும் பதிக்கப்பட்டு உள்ளன.
அசோக தூணுக்கு கீழே, ரூபாய்க்கான அடையாளமும், 'ஆயிரம்' என்ற எண்ணும் தெளிவாகப் பொறிக்கப்பட்டு உள்ளன.
நாணயத்தின் பின்புறத்தில், பேரரசர் ராஜேந்திர சோழன் 1-ன் பிரம்மாண்டமான கடற்படையை காட்சிப்படுத்தும் வகையில், நாணயத்தின் மையத்தில் உருவம் பதிக்கப்பட்டு உள்ளது. இது சோழர்களின் கடல் வலிமையையும், உலகளாவிய வர்த்தகத்தையும் நினைவூட்டுகிறது.
இதேபோன்று, "பேரரசர் ராஜேந்திர சோழன் 1-ன் ஆயிரம் ஆண்டுகள் கடற்படை பயணம்" என்று ஆங்கிலம் மற்றும் தேவநாகரி மொழிகளில் வரி வடிவமாகப் பொறிக்கப்பட்டு உள்ளன. இது அவரது புகழ்பெற்ற தென்கிழக்கு ஆசிய கடல்வழிப் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு நினைவை குறிக்கிறது.