18 வயது வரை மாதம் ரூ.2000 கொடுக்கும் தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?

Published : Jul 27, 2025, 05:05 PM IST

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 ஊக்கத்தொகை வழங்கும் ஆதரவு கரஙகள் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

PREV
14
Tamilnadu Aatharavu Karangal Scheme

தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களில் தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து உறவினர்களின் பாதுகாப்பும் வளர்ந்து வரும் குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் "அன்பு கரங்கள்" என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

24
அன்பு கரங்கள் ஆதரவு திட்டம்

இந்த திட்டத்தின் கீழ் தாய், தந்தையை இழந்து வாடும் குழந்தைகளுக்கு அவர்களின் 18 வயது வரை மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த குழந்தைகள் பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர அரசு சார்பில் இந்த ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

34
யார் விண்ணப்பிக்கலாம்?

ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்), கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை (Physically/mentally challenged) ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து. மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்) ஆகியோர் "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

44
விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

குடும்ப அட்டையின் நகல், குழந்தையின் ஆதார் அட்டையின் நகல், குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/ கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்), குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகியவை "அன்பு கரங்கள்" திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களாகும்.

எப்படி விண்ணப்பிப்பது?

"அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற அவரவர் மாவட்டங்களில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர்/மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories