தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, கரூர், பரமத்தி, மதுரை நகர், மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய பகுதிகளில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மறுபுறம் கத்தரி வெயில் காரணமாக அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.