தமிழகத்தில் கோடை வெயில் பிச்சு எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். தொடர்ந்து பல இடங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி வெப்பம் வாட்டி எடுத்தது. அதேபோல் ஈரோடு, திருச்சி, திருத்தணி, மதுரை விமான நிலையம், பரமத்தி, மீனம்பாக்கம், நாமக்கல், நாகப்பட்டினம், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தஞ்சாவூர், நுங்கம்பாக்கம், கோவை, பாளையங்கோட்டை உள்ளிட்ட 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி இருந்தது.