முன்னதாக ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூரு வந்தார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கூடலூர் வந்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் கேரள எல்லை என்பதால் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ்காரர்களும் ராகுல் காந்தியை வரவேற்றனர்.
அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை
ராகுல் காந்தி தனியார் பள்ளிக்கு வந்தவுடன் பாரம்பரிய நீலகிரி மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனத்துடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூடலூரில் தனியார் பள்ளி விழாவில் மட்டும் பங்கேற்கும் ராகுல் காந்தி, விழா முடிந்ததும் மைசூருக்கு ஹெலிகாப்டாரில் சென்று அங்கிருந்து டெல்லி திரும்புகிறார். அவர் எந்த ஒரு அரசியல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.