பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு அதிர்ச்சி.! ஞாயிற்றுக்கிழமை இன்று மற்றும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!

Published : Feb 15, 2026, 07:09 AM IST

Power Cut: மின்தடை செய்யப்படும் நேரத்தில் சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

PREV
15
தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழகத்தில் மின்சார வாரியம் தரப்பில் 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யும் விதமாக மாவட்டம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது மேற்கொள்வது வழக்கம். அன்றைய தினம் மின்தடை செய்யப்படும் நேரத்தில் சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

25
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள்

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக எப்போதும் இல்லாத வகையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மற்றும் நாளை தலைநகர் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

35
அம்பத்தூர் சிட்கோ

அம்பத்தூர் இன்டஸ்டிரியல் எஸ்டேட்

நியூ டைனி செக்டர், போஸ்ட் ஆபீஸ் ரோடு 2வது மற்றும் 5வது தெரு, அம்பிட் ஐடி பார்க் ரோடு, 2வது மெயின் ரோடு ஸ்பூத் பேஸ் ஆகிய இடங்களில் மின்தடை.

அம்பத்தூர் சிட்கோ

மாரியம்மன் கோவில் தெரு, குலக்கரை தெரு, கண்ணன் கோவில் தெரு, ஆவின் பிரதான சாலை, ஈபி சாலை 1 முதல் 4வது தெரு, வடக்கு கட்டம் 31ஏ சாலை, வடக்கு கட்டம் 12 மற்றும் 13வது தெரு, கொரட்டூர் டைனி செக்டர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

45
அம்பத்தூர்

ராமாபுரம்

மங்களா நகர், அம்பாள் நகர், போரூர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, ஆர்.இ.நகர், வன்னியர் தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

அம்பத்தூர்

மணலோடை தெரு, பத்மா சீனிவாச நகர், சரஸ்வதி நகர், லெனின் நகர், ஏரிக்கரை சாலை, வெங்கடேஸ்வரா நகர் பகுதிகள் அடங்கும்.

55
வியாசர்பாடி

இஎச் சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புதுநகர். முக்கிய தெருக்களில் எம்பிஎம் தெரு, மார்க்கெட் தெரு, சென்ட்ரல் கிராஸ் தெரு 10 முதல் 19 வரை, கிழக்கு குறுக்குத் தெரு 10 முதல் 19 வரை, எம்கேபி நகர் 1 முதல் 8வது மெயின் ரோடு, எம்கேபி நகர், கல்யாண்புரம், சத்தியமூர்த்தி நகர் 1 முதல் 25வது தெரு, சாமியார்தோட்டம் 1 முதல் 4வது தெரு, சுதா 4வது தெரு, பல்லையா 4வது தெரு, சர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories