தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி..? இடியை இறக்கும் மத்திய உளவுத்துறையின் சர்வே ரிப்போர்ட்..!

Published : Feb 14, 2026, 08:13 PM IST

அதிமுக, பாமகவில் இருக்கிற உட்கட்சி பிரச்சனைகள் மீது யாரும் அக்கறை செலுத்தாமல், திமுக எதிர்ப்பு அலை நம்மை காப்பாற்றும் என்றும், இப்போதே ஆட்சிக்கு வந்தது போல் கெத்து காட்டுவதும்தான் என்.டி.ஏ கூட்டணியின் மிகப்பெரிய மைனஸ்

PREV
13
TN Election 2026 survey report

அடுத்தது யார் ஆட்சி என பல சர்வேகள் வந்தாலும் மத்திய அரசு, உளவுத்துறை மூலமாக எடுத்த ஒரு சர்வே தமிழக கட்சிகளின் மேல் மட்ட அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

தமிழ்நாட்டில் பாஜக-அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்.டி.ஏ) மக்கள் கிட்ட வரவேற்பு எப்படி இருக்கிறது? எத்தனை இடங்களில் வெற்றிபெறும்? என மத்திய உளவுத்துறை ஒரு சர்வே எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த சர்வை முடிவுகள் என்.டி.ஏ கூட்டணிக்கு மாபெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது என்கிறார்கள். ஆட்சி அமைக்க முடியாத அளவுக்கு மட்டுமே என்.டி.ஏ கூட்டணி இந்த முறையும் தொகுதிகளை கைப்பற்றும் என்று அந்த சர்வே முடிகள் கூறுகிறது.

23
என்.டி.ஏ கூட்டணியின் மிகப்பெரிய மைனஸ்

கிட்டத்தட்ட 2021 சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி பெற்ற தொகுதிகளுக்கு மேல் வாங்க வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த சர்வே குறித்து அதிமுக கூட்டணி கட்சியில் இருக்கிற முக்கியமான தலைவர் ஒருவர், ‘‘சர்வே நம்பர் சரியாகத்தான் வந்திருக்கிறது. அதுதான் களநிலவரமும் கூட. கூட்டணியில் இருக்கிற குறிப்பாக, அதிமுக, பாமகவில் இருக்கிற உட்கட்சி பிரச்சனைகள் மீது யாரும் அக்கறை செலுத்தாமல், திமுக எதிர்ப்பு அலை நம்மை காப்பாற்றும் என்றும், இப்போதே ஆட்சிக்கு வந்தது போல் கெத்து காட்டுவதும்தான் என்.டி.ஏ கூட்டணியின் மிகப்பெரிய மைனஸ்’’ என்று கமெண்ட் அடித்தாராம்.

33
திமுகவுக்கும் ஷாக்..!

தவெகவின் வரவு என்.டி.ஏ கூட்டணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த சர்வே ரிப்போர்ட்டில் இருக்கிறதாம். அதே சமயம் திமுகவுக்கும் சில ஷாக்கான விஷயங்கள் அந்த சர்வேயில் இருக்கிறது’’ என்கிறார்கள்

Read more Photos on
click me!

Recommended Stories