நெருங்கும் பொங்கல்! மிரட்டப்போகிறதா கனமழை? வானிலை மையம் சொன்ன ஷாக்கிங் நியூஸ்!

Published : Jan 10, 2025, 04:28 PM ISTUpdated : Jan 10, 2025, 04:31 PM IST

வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் கனமழை. பொங்கல் தினத்தில் மழை பெய்யுமா என்பது குறித்து சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

PREV
15
நெருங்கும் பொங்கல்! மிரட்டப்போகிறதா கனமழை? வானிலை மையம் சொன்ன ஷாக்கிங் நியூஸ்!
Northeast Monsoon

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால், ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தான் வட கிழக்கு பருவமழை முடியும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் பொங்கல் தினத்தில் மழை இருக்கா? இல்லையா? என்பது குறித்து சென்னை வானிலை மையம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. 

25
Tamilnadu Rain

அதாவது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என கூறியுள்ளது.

இதையும் படிங்க: 11, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு! முக்கிய செய்தியை வெளியிட்ட அரசு தேர்வுகள் இயக்ககம்!

35
Heavy Rain

12ம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னடலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

45
TamilNadu weather Update

அதேபோல் 13ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னடலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னடலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்  என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: கைவிட்ட நீதிமன்றம்! திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சிக்கல்!

55
Chennai Rain

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories