பாம்பன் பாலத்தை திறந்து வைக்கும் மோடி
இந்தப் புதிய பாலத்தில் 72.5 மீட்டர் நீளமுள்ள மையப் பகுதி உள்ளது. இதன் மூலம் கப்பல்கள் செல்வதற்காக 17 மீட்டர் உயரத்திற்கு பாலத்தை உயர்த்த முடியும். இந்த நிலையில் பாம்பனில் கடல் நடுவே ரூ.550 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலம் திறப்பு விழாவிற்கு தயாரானது.
ஆனால் ராமேஸ்ரத்தில் ரயில் நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்படாத காரணத்தால் திறக்கப்படாமல் இருந்தது. பல முறை பிரதமர் திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ஏப்ரல் 6ஆம் தேதி பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.