தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என சிலர் கனவு காண்கிறார்கள். திமுகவின் கனவு கானல் நீர் போன்றது. தமிழ்நாட்டை திமுக கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. திமுகவை வெளியேற்ற மக்கள் தீர்மானித்து விட்டார்கள். 2021 தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை வழங்கிய மக்களுக்கு திமுக ஏதும் செய்யவில்லை. பணம் நமக்கு, பிரச்சனை மக்களுக்கு என திமுக அரசு செயல்பட்டது. மதுரையில் ஊழலால் மேயரே பதவி விலகி விட்டார். மதுரை என்றாலே திமுகவுக்கு பிடிக்காது.
திமுக மக்களுக்கு நல்லது செய்யவில்லை
மத்திய அரசு நிதி கொடுத்தாலும் திமுக அரசு நல்லது செய்யாது; நல்லது செய்யவும் விடாது. ஏழைகளுக்காக திமுக அரசு ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. திமுக அரசின் சில்லறை அரசியலால் ஏழை மக்கள் ஏன் அவதிப்பட வேண்டும்? ஏழைகளுக்கு 3 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை திமுக அரசு முடக்கியது.
காங்கிரசும், திமுகவும் தமிழகத்துக்கு செய்தது என்ன?
காங்கிரசும், திமுகவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் தமிழகத்துக்கு எந்த ஒரு நன்மையும், திட்டங்களும் கிடைக்கவில்லை. இப்போது தமிழர்களின் உரிமை என வாய்கிழிய பேசிய திமுக, அப்போது என்ன செய்தது? தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அம்மா ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை பெண்கள் நினைத்து பார்க்கிறார்கள்.