மேலும், தமிழ்நாட்டில் எண்ணெய் தொழில்துறைக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் M.அண்ணாதுரை தெரிவித்ததாவது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு துறை பெட்ரோலிய முனையங்களிலும் (IOC, BPC & HPC) போதுமான அளவில் எரிபொருள் இருப்பு உள்ளது. மேலும், சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து எரிபொருள் விநியோகம் வழக்கம்போல நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தடையில்லா விநியோகத்தை உறுதி செய்ய உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்த பிறகும் தஞ்சாவூர், தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பெட்ரோல் பங்கில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்பி செல்கின்றனர்.