பாவேந்தர் பாரதிதாசன் விருது! ரூ. 1 லட்சம் பரிசை அறிவித்த தமிழக அரசு! விண்ணப்பிப்பது எப்படி?

Published : May 09, 2025, 11:39 AM IST

தமிழ்மொழியில் சிறந்து விளங்கும் 35 வயதிற்கு மேல் 40 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இளம் எழுத்தாளர்கள் இருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்பட உள்ளது. 

PREV
14
 பாவேந்தர் பாரதிதாசன் விருது! ரூ. 1 லட்சம் பரிசை அறிவித்த தமிழக அரசு! விண்ணப்பிப்பது எப்படி?
பாவேந்தர் பாரதிதாசன் விருது

பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்கு தமிழ்மொழியில் சிறந்து விளங்கும் 35 வயதிற்கு மேல் 40 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இளம் எழுத்தாளர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டு ஒரு லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்ப்போம். 

24
தமிழக அரசு

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண். 110-இன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் எப்ரல் 22ம் தேதி அன்று பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். அவ்வறிப்பிற்கிணங்க தமிழ் மொழிக்கு பாவேந்தர், திராவிட இயக்ககத்தின் புரட்சிக் கவிஞர், தமிழகத்தின் மறுமலர்ச்சிக் கவிஞர் அவர்களைப் போற்றும் வகையில் “தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் 35 வயதிற்கு மேல் 40 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் இளம் எழுத்தாளர் மற்றும் கவிஞர் என இருவர் தெரிவு செய்யப்பட்டு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது” வழங்கி விருதுத் தொகை தலா ஒரு இலட்சம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.

34
விண்ணப்பிக்கும் முறை

ஆண் மற்றும் பெண் இளம் எழுத்தாளர் மற்றும் கவிஞர் பெருமக்கள் www.tamilvalarchithurai.tn.gov.in/awards மற்றும் http://awards.tn.gov.in என்ற
இணையதளங்களின் வழியாகவோ அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழுமூர், சென்னை –600 008. என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ, நேரிலோ மே 23ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டுகின்றோம். தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்கள் அமைதல் விரும்பத்தக்கது.

44
கடைசி நாள் மே 23

கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044-28190412, 044-28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் (23.05.2025) பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் என எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கு நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories