திருப்பதியைப் போல தமிழகக் கோவில்களில் 'பிரேக்' தரிசனம் அறிமுகம்!

Published : Jul 10, 2025, 03:38 PM IST

தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களில் பக்தர்களின் நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 'பிரேக்' தரிசன முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை கோவில்களில் முதற்கட்டமாக இந்த முறை நடைமுறைக்கு வரும்.

PREV
15
தமிழகக் கோயில்கள்

தமிழகத்தில் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆகியவற்றுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

25
நீண்ட காத்திருப்பு தேவையில்லை

பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தரிசனம் செய்ய நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சில சமயங்களில் இந்த நீண்ட காத்திருப்பு பக்தர்கள் மத்தியில் வாக்குவாதங்களுக்கும் வழிவகுக்கிறது. இந்த சிரமங்களைத் தவிர்க்கவும், நீண்டநேர காத்திருப்புக்கு விடை கொடுக்கவும், இந்து சமய அறநிலையத்துறை 'பிரேக்' தரிசன முறையை (விரைவு தரிசனம்) அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

35
3 கோவில்களில் 'பிரேக்' தரிசனம்

முதற்கட்டமாக, பழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 'பிரேக்' தரிசன முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த முறையின் கீழ், பக்தர்கள் ஆன்லைன் மூலம் தங்களுக்குத் தேவையான தரிசன தேதி மற்றும் நேரத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம், கோவில்களில் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக இறைவனை தரிசிக்க முடியும்.

45
'பிரேக்' தரிசனத்தின் சிறப்பு

'பிரேக்' தரிசனம் என்பது கோவில்களில் தனி நுழைவு வாயில்கள் மூலம், மிகக் குறைந்த காத்திருப்பு நேரத்துடன், முன்னுரிமை அடிப்படையிலான விரைவு தரிசனம் வழங்குவதாகும். 'பிரேக்' தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இந்த தரிசனத்தை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் பிரசாதம், ஆரத்தி, தீர்த்தம் போன்ற கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும். உதாரணமாக, பழனி கோவிலைப் பொறுத்தவரை, 300 ரூபாய் கட்டணத்தில் 'பிரேக்' தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், தேங்காய், பழம், திருநீறு, மஞ்சள் பை அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
திருப்பதி கோயில் முன்னுதாரணம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏற்கனவே இந்த 'பிரேக்' தரிசன முறை வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. அதே முறையைப் பின்பற்றி, இந்த மூன்று கோவில்களிலும் 'பிரேக்' தரிசன முறை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த மூன்று கோவில்களைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் போன்ற பிற முக்கிய கோவில்களுக்கும் இந்த 'பிரேக்' தரிசன முறை விரிவுபடுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய தரிசன முறை, பக்தர்களின் வசதியை மேம்படுத்துவதோடு, கோவில்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories