இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக நிதித்துறை பதில் மனுவில் தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டம் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயலாக்குவதிலும், தீர்ப்பதிலும் எந்தத் தேக்கமும் இல்லை; சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணம் கேட்டு மொத்தம் 54,000 விண்ணப்பங்கள் வரப்பெற்றது. இதில் 51,000 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் எந்த தேக்கமும் இல்லை என்பதை காட்டுகிறது. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று அரசின் பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை டிசம்பர் 4-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.