பின்னர், 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி ராமராஜ் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு பின்னர், 2020-ம் ஆண்டு தனக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால், ராமராஜ்-க்கு பணி வழங்க அதே ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதியே தலைமை பொறியாளர் பரிந்துரை செய்திருக்கிறார். அதன்படி அவரது பெயர் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டு பழைய ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று 2024-ம் ஆண்டு உத்தரவிட்டார்.