தமிழகத்தில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் (IDSP) கீழ், கோவிட்-19 தொற்று வழக்கமான முறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பரிசோதனைகள்: அறுவை சிகிச்சைக்கு முந்தைய கட்டாயப் பரிசோதனைகள் மற்றும் தீவிர சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மூலம் மட்டுமே தொற்று கண்டறியப்படுகிறது.
புள்ளி விவரங்கள்: 2024-ல் 990 பேரும், 2025-ல் 1,250 பேரும், 2026-ல் தற்போது வரை 335 பேரும் என மொத்தம் 2,575 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இவை நோய்த் தொற்று பரவலால் (Outbreak) உருவானவை அல்ல; வழக்கமான கண்காணிப்பின் மூலம் கண்டறியப்பட்டவை மட்டுமே.