Schools: தமிழக அரசு அதிரடி ஆக்ஷன்! பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

Published : Jul 14, 2026, 10:21 AM IST

Morning Breakfast Scheme: பள்ளியில் காலை உணவு வழங்கப்படாததை அடுத்து, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குத் தரமான உணவு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு உத்தரவு.

PREV
14

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி காலை உணவு வழங்கப்படாதது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில் அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

24

அதாவது சமூக நல இயக்குநரின் கடிதத்தில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேரூராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த ஜூன் 19 அன்று மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படாததால், அதற்கு மாற்றாக பிஸ்கட் வழங்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் சத்தான காலை உணவை உட்கொண்டு வகுப்பினை ஆரோக்கியமாகத் தொடங்குவதையும், ஊட்டச் சத்து குறைபாடு மற்றும் கவனச் சிதறலைத் தவிர்த்து சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, திட்டத்தின் செயல்பாட்டில் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coimbatore Tourist Place: ஊட்டி, கொடைக்கானல் போரடிச்சிருச்சா? கோவையைச் சுற்றி இருக்கும் இந்த 10 ஸ்பாட்களுக்கு ஒரு விசிட் அடிங்க!

34

மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் மீள ஏற்படாவண்ணம் உணவுப் பொருட்கள் உரிய அளவில் இருப்பதை உறுதி செய்வதுடன், மாணவ, மாணவியர்களுக்கு தினசரி தரமான, போதுமான அளவு உணவு வழங்கப்படுகிறதா என்பதையும், அவர்கள் உணவை முறையாக உட்கொள்கிறார்களா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்குமாறு தங்கள் துறையின் கீழ் செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

44

எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் மீள ஏற்படாவண்ணம், உணவுப் பொருட்கள் உரிய அளவில் இருப்பதை உறுதி செய்வதுடன், மாணவ, மாணவியர்களுக்கு தினசரி தரமான, போதுமான அளவு உணவு வழங்கப்படுகிறதா என்பதையும், அவர்கள் உணவை முறையாக உட்கொள்கிறார்களா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறு, அனைத்து மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories