இந்நிலையில், கடல் வளத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துரைக்கும் நோக்கில், திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும் என சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை சார்பில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
"திருநெல்வேலி மாவட்டம், கூத்தன்குழி முதன்மை சாலையில் வரும் நவம்பர் 21-ந்தேதி மாலை 4 மணியளவில், 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும். 'ஆதி நீயே! ஆழித்தாயே!' என்ற முழக்கத்தை முன் வைத்து இம்மாநாடு நடைபெறும்.