அப்போது அவர் பேசுகையில், “நாங்கள் குட்டிக்கதை சொல்ல வந்தவர்கள் கிடையாது தம்பி. வரலாற்றை கற்பிக்கவந்தவர்கள். நீங்கள் இனிமேல் தான் அம்பேத்கர், பெரியார் எல்லாரையும் படிக்க வேண்டும். ஆனால் நாங்கள் இவர்களை படித்து பி.எச்.டி முடித்து அறிக்கை சமர்ப்பித்துவிட்டோம். சங்க இலக்கியத்தில் இலக்கியம் எங்கே இருக்கிறது என்று நீங்கள் இனிமேல் தான் தேட வேண்டும். ஆனால் சங்க இலக்கியங்களில் வருகின்ற பாண்டியன், நெடுஞ்செழியனின் பேரனும், பேத்தியும் நாங்கள்.