இதனால் இந்த வழித்தடத்தில் பயண நேரம் 30 முதல் 40 நிமிடங்கள் வரை குறையும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இப்போது சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சுமார் 3.50 மணி நேர நிமிடங்கள் செல்கின்றன. மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் சராசரியாக 5 மணி நேரத்தில் செல்கின்றன. இந்த வழித்தடத்தில் 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டால் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களும் சென்னையில் இருந்து திருச்சிக்கு சுமார் 4 முதல் 4.30 மணி நேரத்தில் சென்று விட முடியும்.
இது மட்டுமின்றி வந்தே பாரத், தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களும் 3 முதல் 3.15 மணி நேரத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்ல முடியும். இந்த பயண நேரம் குறைப்பு காரணமாக சென்னையில் இருந்து நெல்லை செல்லும் ரயில்கள் 9 முதல் 9.30 மணி நேரத்தில் சென்று விடலாம். ஆகவே வழித்தடத்தை மேம்படுத்தும் பணிகளை விரைவில் முடிக்க பயணிகள் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம்-தாம்பரம் புதிய ரயில் இன்று முதல் இயக்கம்! புறப்படும் நேரம்? எந்த வழியாக செல்கிறது?