Heavy rains in Tamilnadu: தமிழ்நாட்டில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம், வேலூர் என மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தினமும் 35 டிகிரி செல்சிஸ்க்கு மேல் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் வருணபகவான் கருணை காட்ட மாட்டாரா? என மக்கள் ஏங்கித் தவித்து வந்த நிலையில், சில இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.