பள்ளி மாணவர்கள் குஷியோ குஷி.! ஜூன் மாதம் பள்ளி திறப்பு தள்ளிபோகிறது.? வெளியான அசத்தலான தகவல்

Published : Apr 07, 2025, 08:35 AM ISTUpdated : Apr 07, 2025, 10:26 AM IST

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பள்ளிகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளது. தேர்வுகள் ஏப்ரல் 17-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. 

PREV
15
பள்ளி மாணவர்கள் குஷியோ குஷி.! ஜூன் மாதம் பள்ளி திறப்பு தள்ளிபோகிறது.? வெளியான அசத்தலான தகவல்

School Summer Holiday : தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது. இதனால் வெளியே மக்கள் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். வீட்டிற்குள்ளும் வெப்பம் கொளுத்துவதால் ஏசி இல்லாமல் இருக்க முடியாத நிலை நீடிக்கிறது.

இந்த நிலையில் பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு இன்னும் முடிவடையாமல் உள்ளது. இதனால் வெயிலில் பாதிப்பில் சிக்கி  தினந்தோறும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வரும் நிலை நீடித்து வருகிறது.

25
school holiday

School Exam Holiday : கொளுத்தும் வெயிலில் பள்ளிகளின் வகுப்பறையில் மாணவர்கள் மிகுந்த உடல் நிலை பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். ஏற்கனவே 12 வது மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்சி தேர்வுகள் முடிவடைந்து விட்டது. அடுத்ததாக மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. எனவே மற்ற வகுப்பு மாணவர்களுக்கான தேர்வையும் விரைந்து முடிக்க பெற்றோர்கள் வலியுறுத்தி வந்தனர்.
 

35
School Holidays

பள்ளி ஆண்டு இறுதி தேர்வு

ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து  கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்த தேர்வானது இன்று முதல் (ஏப்ரல் 7ஆம் தேதி) முதல் தொடங்கப்படவுள்ளது.

இந்த தேர்வை ஏப்ரல் 17-ம் தேதியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளிகளில் மீண்டும் திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்,

45
school holiday

பள்ளி மீண்டும் திறப்பு எப்போது.?

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக  ஏப்ரல் 21-ம் தேதி நடைபெறவிருந்த பள்ளித் தேர்வுகள் ஏப்ரல் 17-ம் தேதிக்கே மாற்றப்பட்டுள்ளன.மேலும் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும்.  பள்ளிகள் திறப்பு தொடர்பாக ஆய்வு செய்ய காலநிலை மேலாண்மை குழு ஒன்று உள்ளது. குழுவின் ஆலோசனை பெறப்படும். 

55
School holiday

ஜூன் மாதம் எப்போது பள்ளிகள் திறப்பு

அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிகள் ஜூன் மாதத்தில் எந்த தேதியில் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்தார். எனவே கோடை வெயிலின் தாக்கம் ஜூலை மாதம் இறுதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு காலதாமதமாகவே பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஜூன் 2ஆம் தேதி கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுமா.? அல்லது ஜூன் 9ஆம் தேதி திறக்கப்படுமா.? என்பது விரைவில் தெரியவரும். 

Read more Photos on
click me!

Recommended Stories