Nanjil Sampath: தவெக கட்சியை சில ஈனப்பயல்கள் தற்குறிகள் என்று சொல்லும் அனாதைகளுக்கு சொல்கிறேன் நாங்க ஆச்சரிய குறியாக மாறுவோம். திமுக மாநாட்டில் பத்தாயிரம் பேர் வடு இல்லை.
தமிழக வெற்றிக்கழக மகளிர் தின பொதுக்கூட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத்: திமுகவில் இருந்த போது கள்ளக்குறிச்சிக்கு விழுப்புரத்திற்கு விக்கிரவாண்டிக்கோ, திருக்கோவிலூருக்கோ வர செம்மண் திருடியவர்கள் அனுமதிக்கவில்லை. பெண்கள் சபிக்கப்பட்டவர்கள் பெண்கள் பிள்ளை பெறுபவர்களாகவும் போதையாக கருதுபவர்கள் இன்னும் உள்ளனர். உண்மையில் பெண்கள் வலிமை மிக்கவர்கள் திறமைமிக்கவர்கள் ஆணாதிக்க சமூகத்தில் பெண்களை அடிமை படுத்துவர்கள் இருந்து கொண்டு தான் உள்ளார்கள்.
25
பாஜக பெண்களை மதிப்பதில்லை
வர்த்தக சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், மகளிர் தினத்தை கொண்டாடுகிற தகுதி தவெகவிற்கு இருப்பது போல் வேறு எந்த இயக்கத்திற்கும் அரசியல் கட்சிக்கும் இல்லை. மகளிர் தினத்தினை திமுகவும் அதிமுகவும் கொண்டாடவில்லை பாஜக பெண்களை மதிப்பதில்லை நாங்கள் மதிக்கிறோம் என கூறினார். தவெக கட்சியை சில ஈனப்பயல்கள் தற்குறிகள் என்று சொல்லும் அனாதைகளுக்கு சொல்கிறேன் நாங்க ஆச்சரிய குறியாக மாறுவோம்.
35
தவெகவை பார்த்து திமுக காப்பி
திமுக மாநாட்டில் பத்து லட்சம் பேர் என கூறி பத்தாயிரம் பேர் மட்டுமே வரவழைக்கப்பட்டனர். மாநாட்டில் யாரையும் பேச விடாமல் முதல்வர் ஸ்டாலின் மட்டுமே 40 நிமிடம் பேசுகிறார். ரேம்ப் பாக் ஸ்டாலின் சென்றதை யாரும் விரும்பவில்லை. விக்கிரவாண்டியில் ரேம்ப் வாக்கை தொடங்கியவரே விஜய் தான். தவெக துண்டு போடுவதை பார்த்துதான் 75 ஆண்டுகள் வரலாறு கொண்ட திமுக துண்டு போடுகிறார்கள். ஸ்டாலினும் துண்டினை தூக்கி சுத்தலாமா என பார்க்கிறார்கள் தவெகவை பார்த்து திமுக காப்பி அடிப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என கூறமுடியாது என தெரிவித்தார்.
தவெக கூட்டணிக்கு பேச்சுவார்த்தைக்கு குழுவே அமைக்காத ஒரே கட்சியாக உள்ளதாகவும் நாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என கூறினார். திமுக கூட்டணியில் உள்ள 24 கட்சிகளின் பெயர்களை ஸ்டாலின் கூறினால் தான் நிர்வாணமாக நடக்க தயார். அதேபோல் திமுகவை அழிக்க பிறந்தவர் உதயநிதி ஸ்டாலின் சொல்லுவாரா என நாஞ்சில் சம்பத் சவால் விடுத்தார். தமிழகத்தில் ராசாயனம் மாற்றம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. பொற்கால ஆட்சி நடைபெறுவதாக தெரிவிக்கிறார்கள் அது அவர்களுக்கு தான் பொற்காலமாக உள்ளதாகவும் கோடி கோடியாக கொள்ளை அடித்து குவித்து வைச்சி இருக்காங்க என குற்றஞ்சாட்டினார்.
55
கொடநாடு கொலை கொள்ளை
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்ய முதல்வர் தயங்குவதேன். திமுகவிற்கும் அதிமுகவிற்கும் கள்ள உறவு உள்ளது என்பதை காட்டுவதாகவும் பந்திக்கு முந்துபவர்கள் தவெகவினர் இல்லை படைக்கு முந்துபவர்கள் என தெரிவித்தார்.